Thursday, August 27, 2009

மழை நின்றுபோன இரவு

19 comments

 ருளின் மென்போர்வை தளர்த்தி 9_Rain_at_Night
அலையும் வன்மம்.
முகத்தினை  கொடூரமாக்கி
இறுதி வார்த்தைகளில் திட்டியது

அநாமதேயமாக பெய்யும் மழை 
விரல் பற்றி அழைத்துச் சென்றது
காதல் உலர்ந்த நாட்களிற்கு

தெருமுனையில் உறங்கும் குழந்தை
சன்னாமாய் ஒலி எழுப்பி
அயர்ந்து தூங்குகிறது
தாயின் நித்திரை சிதைத்து

வழிந்துபோகும் இடம் புரியாமல்
தேங்கியிருக்கிறது மழை நீர்
முறிந்த நம்காதலின் எச்சமாய்.

Thursday, July 16, 2009

ஒரு திரில் திருமணம்…

22 comments

muslim-wedding-hands

பின்சாமத்தில் ஒரு முறை ”திடுக்கிட்டு” கண் விழித்த போது, நோக்கியாவின் திரையினை பார்த்துச் சாய் சிரித்துக்கொண்டிருப்பதாக ஜோ சொன்னான். நொடிக்கு நொடிக்கு நோக்கியாவின் திரையினை பார்ப்பதும் குப்புற படுப்பதுமாக இருப்பதாகவும்.எப்போது தூங்குவான், எப்போது எழுந்திருக்கிறான் என்பது மில்லியன் டோலர் கேள்வியாக இருப்பதாகவும் சொன்னான். அலாரம் வைத்தவனாய் ஆறுமணிக்கெல்லாம் படுக்கை விரித்துவிடுவான், நித்திரை கொள்வதென்னமோ பின்சாமத்தில்தான்.

நோக்கியாவின் திரை உயிர்த்து அதன் ஒளி கீற்றுக்கள் மேற்சுவரில் தெறிக்கும் போது ’திடும்’ என எழுந்து புன்னகைத்தான். ”என்னடா மச்சி ?” என ஒரு முறை  ஜோ வினவிய போது  ”ஒரு குருவி சிக்கியிருக்கிடா” என்றான் ல்லோசன குறும் சிரிப்புடன்.சிக்கியிருக்கும் இந்த குருவி - காக்கா,கிளி போன்ற பறவைகள் என எண்னுபவர்கள், ஒரு நல்ல ஆ.கு வைத்தியரினை அனுகலாம். 

புதிதாக எங்கள் நட்புச் சதுரத்தினுள் நுளைந்த ஜோவிற்கு இது பிரமிப்பாக இருக்கலாம். சாயுடன் முன்று வருடங்களாக குடும்பம் நடத்தும் எங்களுக்கு (நான்,வினோ,சரா), காலையில் எழுந்து பல் தேய்க்காமல் கணனி முன்னால் அமர்ந்து-ஆப்பிள் யூஸ் குடித்தபடி-சட்டிங் செய்வது  போன்ற ஒரு சாதரண நிகழ்வு.

சாய்க்கும்-பொண்களிற்குமான தொடர்பு ( இதனை சாய் நட்பு என்பான்)  எவ்வளவு விரைவாக பற்றிகொள்கிறதோ, அவ்வளவு விரைவாக விட்டும் போகும். அதாவது அந்த குருவிக்கு புதிய கரும்குரங்கு(வார்த்தை உதவி வினோ) சிக்கும்வரை தொடரும்.

ஆனால் அதுவரை, கல்யானமாகி மூண்று மாதங்களோ ஆகும் ஐ.டி தம்பதியரின்(அமெரிக்கா டூ சென்னை) நெருக்கத்திலேயே இருவரும் பேசிக்கொள்வார்கள் என்பதனைவிட கொஞ்சி கொள்வார்கள் என்பதே சரியாகும்.

ஆரம்ப நாட்களில் மனைவியுடன் பேசுகிறான் என ஜோ நினைத்திருந்தான்.அவன் வந்த 3மாசங்களில் ஹாய் அனு, சொல்லுமா நித்து கோபமா ஜானு இல்லமா சுஜி என பெயர்கள் மாறியதில் ஜோவி்ற்கும் உண்மை புரிந்தது. 

இப்படி மாசம்,வாரம்,நாட்களாக கடலையும்போட்டு.. கன்றும் வளர்த்துவிட்ட சாய்க்கு நாளை திருமணம்.அந்த புண்ணியவதியை நினைதால்தான்…..

மணிகணக்காக அலை பேசியும்,சாட்டிலும் காதலித்த சாய்க்கு நிச்சயிக்கபட்ட திருமணம் அதவாது தாய், தந்தயர் பார்த்தவளை கரம்பிடிக்கிறான்.

“என்னடா மச்சி இப்படி பண்ணிடியே” என வினவினால்

“வாழ்கைல எப்பவுமே ஒரு திரில் இருக்கனும்டா'” எங்கிறான் ஆமா இதில என்னதான் திரில் இருக்கோ.

Wednesday, July 15, 2009

படித்ததில் பிடித்தது

7 comments

பரதேசிகளின் பாடல்கள் கவிதை தொகுதியில் இருந்து.

என் அக்காவும் உன் அம்மாவும் நீயும் நானும்

க்கா சாமத்தியப்பட்ட போது 1_raajasthaan_oviyam
அவள் விழாவொன்றினால்
புனிதமாக்கப்பட்டாள்.

அவள் இளைஞர்களுடன்
பேசுவதே அவரகளை உற்று
நோக்குவதோ 
ஒழுக்ககேடென்றானது 
புள்ளிமானென ஓடித்திரிந்த அவள்
சுருங்கிப் போனதாய் எனக்கொரு
ஞாபகம்.
அகத்திலிருந்து எழுந்த அழைப்புகளை
மறுத்து மறுத்துப் போராடிப் போராடி 
களைந்து அவள் கருகிப்போனது
எனக்கு தெரியும்
பின்னொரு நாள் குறிப்பும்
பொருந்தமும்
பார்த்து
அவள் ஒரு குசினியில் இருந்து
இன்னொரு
குசினிக்கு மாற்றம் பெற்றுச் சென்று
குழந்தைகளும் பெற்றாள்
அவ்வளவு தான் அவள் வாழ்க்கை
அவ்வளவே அவள் அனுபவங்கள்.

 
உன் அம்மாவும் அப்படித்தான்
தாய்லாந்தில் ஒருநள் அவளுக்கு
தாலிகட்டினேன்.

அன்புக்குரிய மகளே நான்
புலம்பெயர்ந்த அந்நிய பூமியில்
பிறந்தவளே
நேற்று நீ அழகான ஆபிரிக்க
இளைஞனுடன் கூடி நின்றாய்
பூங்காவில்
ஒரு அரபு இளைஞனுடன் அருகிருக்க
கண்டேன்.
பாடசாலை நண்பர்களுடன்
நாட்டிய சாலைகளுக்கு செல்கிறாய்
எல்லை கெட்ட நேரங்களில்
நீ மாலை வீடு வந்து சேர்கிறாய்

இப்போது நீ வாக்களிக்கும் உரிமை
பெற்றவள்
உன் வாழ்கையையும் தீர்மானிக்கும்
உரிமை உண்டென்கிறாய்

விடுதலை பற்றியும் விட்டகலல்
பற்றியும் விபரிக்கிறாய்
பாதை போட்டு பயனிக்கும் வீரியம்
தேடுகிறாய்.
போட்டிருக்கும் பாதைகளில்
பயனித்து பயனில்லை என்கிறாய்

நீ இங்கு வித்தியாசமானவல்ல
நீ இங்கு விசித்ஹ்திரமானவளல்ல

வாழ்வை முழுமையாக தரிசிக்கும்
உன் பேராவல் முற்றிலும் நியாயமானது
உன் அக அழைப்புக்களை நீ
அருவருபி்ன்றி ஏற்றுக்கொள்கிறாய்
அவற்றுடன் நீ போராடுவதுமில்லை
என் அக்க போன்று நீ அவற்றினை
அழுத்தி நசுக்கி விடுவதில்லை

அப்படியானால் எனக்கேன்
உன் மீது ஆத்திரம் வருகிறது
எல்லா நியாயங்களும் உன்
பக்கமிருந்தும் உன்னை நான்
ஏன் திட்டிக் கொண்டிருக்கிறேன்

என் சமூகம் சமைத்து
எனக்களித்த வார்த்தைகளால்  

************************

சாமத்தியப்படுதல் -  பூப்படைதல், குசினி- சமயல் அறை

புத்தக இடுக்குகளில் சொருகப்படும் அட்டை போலைருக்கும் குட்டியான  கவிதை தொகுதி. புலம்பெயர் தமிழர்களின் கவிதைகளை பரதேசிகளின் பாடல்கள் எனும் இந்த ச்சின்ன புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறது அப்பால் தமிழ். படைப்பளிகள் அழிந்த படைப்புக்களின் தொகுப்பு எனும் துனை தலைபோடு தொடுக்குக்கபட்டிருக்கும் இத்தொகுதியில் படைபாளின் பெயர் குறிப்பிடபடவில்லை.
இனையதளம்-அப்பால் தமிழ்

ஒளிப்பட உதவி - http://www.tamilmantram.com

Tuesday, July 7, 2009

மழை நாட்களின் வெம்மை

16 comments

871765135_6dbdfe7ce0 

றிவிக்கபடாத நாட்களில்
பெய்திடும் மழை
உன் வருகையினை நினைவுபடுத்தும்

வறவிடப்படும் பேருந்துகள்
உன் காத்திருத்தலின் நிமிடங்களினை
இன்னும் அதிகரிக்கிறது

ப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.

பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.

திகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.

Tuesday, June 16, 2009

Twenty20 யும் ஆயிரத்தில் ஒரு பசங்களும்

7 comments

ICC World Twenty20
திர் பார்த்த பரபரப்பும்,அதிரடியும் நிறையவே மிஸ்ஸிங். பெரிய மைதானங்களும், வேகப்பந்து ஆடுகளங்களும்(சுழல்பந்து வீச்சாளர்களே பிரகாசிக்கிறார்கள்)  பேட்டியின் விறுவிறுப்பினை குறைத்திருக்கினறன.ஆனாலும் மேசமில்லை. நடப்புச் சம்பியன் இந்தியாவும் நடையைகட்டிய பின்னர், எனக்கு பிடித்த இங்கிலாந்தும் பரிதாபமாக  வெளியேறியது.

மீதமிருப்பது

104849 

  • மேற்கிந்திய தீவுகள்- விஸ்வரூபம் எடுக்காவிட்டாலும் நன்றாகவே போராடுகிறார்கள்.Gayle-ஐ எதிர்பார்த்திருக்க Brovoவோ சகலதுறையிலும் அசத்துகிறார் .
  • தென் ஆபிரிக்கா- பெரிதும் எதிர்பார்கும் அணி.சம்பியன் ஆவதற்கான திறமையும்,தகுதியும் இருந்தாலும் அதிஸ்டம்தான் கைகொடுப்பதில்லை.
  • பாகிஸ்த்தான்- தட்டு தடுமாறி அரையிறுதி வாய்ப்பினை பெற்றிருக்கிறது. முக்கியமான போட்டிகளில் மூர்க்கமாக போராடுவது பாகிஸ்தானின் பலம்.
  • இலங்கை-சங்கா நன்றாகவே செயற்படுகிறார், மத்திய வரிசையில் அதிரடி மிஸ்ஸிங். ஆரம்ப துடுப்பாட்டமே பலம்.
  • நியூசிலாந்து-துடுப்பாட்டம்,பந்து வீச்சு என அத்தனையிலும் திறமையான வீரர்கள் இருந்தும் .ம்ஹும் சொல்லி கொள்ளும்படியான வெற்றிகள் எதுவுமேயில்லை-இன்றாவது சாதிப்பார்களா??

ன்று மாலை பரபரப்பான போட்டி-நியூசிலாந்திற்கு பழிக்கு பழி வாங்க ஒரு தருணம். -சங்கா தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு - காலநிலை சீராக அமைந்தால் -விறுவிறு விருந்து தயார்.

/////

பசங்க
pasanga-mar23-2009வி
கடனில் பசங்க இயக்குனரின் பேட்டி வாசித்தபோதோ,பட ஸ்டில்கள் பார்த்த போதோ அவ்வளாவாக கவரவில்லை.ஆனால் படம் பார்த்தவுடனே மிகவும் பிடித்துவிட்டது. வண்டுகளின் நடிப்பு அபாரம்.அதிலும் பக்கடா-சூப்பர் பா.

////

ஆயிரத்தில் ஒருவன் -  
Aayirathil-Oruvan24 பாடல்கள் வித்தியாசமாகவும்,சிறப்பாகவும் வந்திருக்கிறன.ஜி.வி-யிடம் நிறையவே வேலை வாங்கியிருக்கிறார் செல்வா.பாடல்களினை கேட்டும் போது யுவானாக இருந்தால், இன்னும் சிறப்பாக வந்திருக்குமோ,என இந்த   குரங்குமனம் சிந்திக்கவே செய்கிறது.

Saturday, June 13, 2009

நாட்களினை பிரதியெடுத்தல்…

4 comments

4நாட்குறிப்புக்களிற்கும் எனக்குமான சிநேகிதம் சாரணர் இயக்கத்தில் இனைந்திருந்த பதின்ம வயது ஞபகங்களாகவே உள்ளது. கருநிலம் அப்பிய தடித்த  மட்டையுடைய  குண்டு நாட்குறிப்பு ஒன்று, என் புத்தகப்பையில் எப்போதுமே இருக்கும். அந்த நாளில்  செய்யும் நல்ல செயல், பிடித்த விடையங்களை குறித்துவைத்து, வார முடிவுகளில் வாசித்து காண்பிப்போம்.

பின் நாட்களில் அந்த பழக்கம் அரிதாகி, முற்றாகவே நின்று போனது.பழைய புத்தக அலமாரி இடுக்குகளில் எதாவது தேடும் போது எதோச்சையாக கண்ணில்படும் அந்த கருநீல நாட்குறிப்பில். தொலைந்து போன பால்யம் கண்சிமிட்டி சிரிக்கும்.முகம் மறந்த  நட்புக்களுடனான நெகிழ்சியான தருனங்கள்,கேலிகள்,பிரிவுகள் என அத்தனையும் அதில் படிந்து போயிருக்கும்.

இன்னும் பின் நாட்களில் பிடித்த கவிதை வரிகளை குறித்து வைத்திருந்தேன், குறிப்பாக கண்ணில் சிக்கும் அனைத்து காதல் கவிதகளும்  நாட்குறிப்பின் முழு தாள்களையும் நிரப்பியிருக்கும்.சில சரித்திர குறிப்புக்களும், உதாரணமாக நானும்,அபியும் சந்தித்துக் கொண்ட தினங்களையும்,பரிமாறப்பட பரிசுப் பொருட்களையும் குறித்து வைத்திருந்தேன்.  மழைகள் நின்றுபோன பின்மாலை ஒன்றில் திரும்ப படித்து காட்டலாமேனும் பேராசையில்.

ஆக்கிரமித்திருந்த காதல் மேகங்கள் கலையத் தொடங்கிய நாட்களில் கவிதைகள் நிரப்பியிருந்த நாட்குறிப்பின் பாகங்களினை நண்பர்களின் பிறந்த தினங்கள், முகவரிகள், தொலைபோசி இலக்கங்கள் நிரப்பின. இவற்றினை  குறித்துவைப்பதோடு நாட்குறிப்புகளுடனான தொடர்பு முடிந்து போனது.

அலைபேசி இரண்டம் இதயமாகி என்னுடன் பினைந்த பின்னர், நாட்குறிப்புக்கள் தேடுவாரற்று போனாது.மூலைவீட்டு எச்சுமி பாட்டியின் பிறந்த தினத்திலிருந்து கணடாவில் பிறக்கவிருக்கும் அக்கா மகனின் பிறந்த தினம் வரை சேமித்து வைக்க அருளிய முகமறியாத அலைபேசியை சிருஸ்டித்தவனை அடிக்கடி நமஸ்கரித்தேன்.

ஒரு முறை  எனது அகோர ஸ்பரிச தாக்குதல்களிலிருந்து தன்னைவிடுவிக்க-திடுமென- தனது முழு இயக்கத்தினையும் அலைபேசி நிறுத்தியது . அதனுடன் எச்சுமி பாட்டி பூவுலகில் வாழ்ந்ததற்கு இருந்த ஆதாரங்களும், இரு முறை அபி தந்த முத்தங்களின் சத்தங்களும் அழிந்து போனது.

பின்னர் அலைபேசியில் சேமிக்கும் அத்தனையும்,நாட்குறிப்பிலும் குறித்துவைக்க தவறுவதேயில்லை.

 

  •   றந்து போன நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தினை.. மீண்டும் தொடர இடமருளிய கூகுலாணந்தாவை வணங்கி, நாட்குறிப்புக்களை தொடரலாம் என நினைத்திருக்கிறேன்.  உதிர்ந்து போன பால்யங்களின் நிகழ்வுகளினை, நெகிழ்ச்சியான தருணங்களினை மீட்டுப் பார்க்கும் சந்தர்ப்பம்.

Thursday, June 11, 2009

எனக்கான குறிப்புக்கள்.

8 comments

148280804_cc9c1adb85

சொட்டிக்கொண்டிருக்கிறது காதல்
பினைந்திருக்கும் விரலிடுக்கிலும்
பிரியமலிருக்கும் உதடுகளிலும்.

***

வார்த்தைகளோடு காதலினையும் 
கடத்தும் தொலைபேசிகள்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
நிராகரிக்கபடும் அழைப்புகளில்
வழியும் காதலினையும்
சேர்க்கப்படாத வாழ்த்துக்களில்
தகிக்கும் வெம்மையினையும்

***

காதல் மட்டுமல்ல;
கண்களும் தான்;
உலர்ந்து விட்டிருக்கிறது.

***

நீர்ப்பரப்பிலிருந்து விடுபட்ட மீன்களாகின்றன
காதலிலிருந்து துண்டித்த இதயங்கள்.

-ஆபிரகாம்

Monday, June 8, 2009

நீட்சியான இரவுகள்.

7 comments

2767623568_1aeeb63478 

வெம்மை அப்பிய உதடுகளின்
ஈரமுத்தங்கள்;
நினைவில் வரும் மழைநாட்களில்.
நீட்சியான இரவுகளும்
சூடான  கோப்பை தேநீரும் 
சில முத்தங்களும் கிடைத்துவிடுகின்றது

வனிப்பவரின்றி பெய்யும் மழை
சுருண்டுகிடக்கும் நாய்
சுவார்சியமின்றி விரியும் இரவு
தலையனை இளம்சூட்டில் 
வழியும் காதல் என
விட்டுபோன காதலினை 
ஆக்கிரமிக்கின்றன நினைவுகள்.

  

-ஆபிரகாம்

Sunday, June 7, 2009

சுய புலம்பல் (அ) முதற்பதிவு

5 comments

tt0700663திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன எனும்,அறிமுகத்தினூடு அறிமுகமாகிய பதிவுலகம்.. புதியதொரு பொழுதுபோக்கிடமாக என்னை  வாசீகரித்திருப்பது மாத்திரமல்லாது, எனனுள் துர் சொப்பனங்களோடு துங்கிக் கொண்டிருந்த எழுத(டைப்ப)னும் எனும் அல்ப ஆசையினையும் கிளறிவிட்டிருக்கிறது- விளைவு !

  • யானும் ஒரு தமிழ் வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்…

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதேனில்..

இவை சைபர் வெளியின் மின்னனுக்களில்,எனக்கான சில பகிர்வுகள்.

-ஆபிரகாம்