வெம்மை அப்பிய உதடுகளின்
ஈரமுத்தங்கள்;
நினைவில் வரும் மழைநாட்களில்.
நீட்சியான இரவுகளும்
சூடான கோப்பை தேநீரும்
சில முத்தங்களும் கிடைத்துவிடுகின்றது
கவனிப்பவரின்றி பெய்யும் மழை
சுருண்டுகிடக்கும் நாய்
சுவார்சியமின்றி விரியும் இரவு
தலையனை இளம்சூட்டில்
வழியும் காதல் என
விட்டுபோன காதலினை
ஆக்கிரமிக்கின்றன நினைவுகள்.
-ஆபிரகாம்
7 comments:
ஏன் இவ்வளவு சோகம் ???
நாலு வரின்னாலும் நச்சுன்னு சொல்லி இருகீக..
pls remove comment verification
தலையனை இளம்சூட்டில்
முகம் புதைக்குமிரு கண்களில் வழியும் காதல்
நாந்தான் உங்களுக்கு மொத பின்னூட்டமா???
நான் ஆரம்பிச்சு வைத்த எந்தக் கடையும் நல்லா போனதா சரித்திரமே இல்ல...
நீங்களாவது தொடருங்க :-)
@கடைக்குட்டி.. நீங்கதான் முதல் பின்னூட்டம்! நன்றி!
@கவிக்கிழவன் நன்றி க.கி
நல்ல கவிதை! தொடர்ந்து எழுதுங்கள், நாங்களிருக்கிறோம் ஆதரவு தர!
@கலையரசன் நன்றி நண்பா!
Post a Comment