அறிவிக்கபடாத நாட்களில்
பெய்திடும் மழை
உன் வருகையினை நினைவுபடுத்தும்
தவறவிடப்படும் பேருந்துகள்
உன் காத்திருத்தலின் நிமிடங்களினை
இன்னும் அதிகரிக்கிறது
இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.
பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.
அதிகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.
16 comments:
//அதிகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.//
திரும்பி வந்தாலும் இதே சோகம் தொடருமுனு சொன்னா நம்பவா போறீங்க
நம்பிட்டேன் நசரேயஜி!
//அதிகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.//
நிதர்சனமான உண்மை
ennala anga poi ukkara mudiyala boss
(that means antha vemmmaiya unara mudiyala
oru velai love pannuthaan mudiumo????!!!!)
இது உங்கள் அனுபவமா? அப்படி அனுபவமாக இருந்தாலும் சொல்லவா போறீங்க..
வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்க. உண்மையானாலும் கற்பனை ஆனாலும்..
வருகைக்கு நன்றி
பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.
அருமை
மிக நேர்த்தியான கவிதை,ஆபிரகாம்.
"இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்து விடுகிறது.."
கண்ணில் நீர் தளும்பியது...
வாழ்த்துக்கள்!
@பிரியமுடன்.........வசந்த் நன்றி வசந்த் ஜி
@பாலா நன்றி booss
@கவினா நன்றி கவினா(நல்ல பெயர்)
@இது நம்ம ஆளு நன்றி ஜி
@பா.ராஜாராம் நன்றி தல
வரிக்கு வரி அருமை.
வாங்க அக்பர்
////இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது////
எங்களுக்கெல்லாம் கிடைக்குதில்லையே .....
அருமையாகவுள்ளது . தொடருங்கள்.
வருகைக்கு ரொம்ப நன்றி அடிக்கடி வாங்க...
@வாங்க பிரபா ஜி
நீங்கள் எழுதியது என்றால் வாழ்த்துக்கள் காப்பி அடித்தது என்றால் பாராட்டுக்கள்
///இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.///
தனிமையாய் ரசித்த வரி.....
அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....
"இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்து விடுகிறது.."
அருமை தொடருங்கள்..!
Post a Comment