Tuesday, July 7, 2009

மழை நாட்களின் வெம்மை


871765135_6dbdfe7ce0 

றிவிக்கபடாத நாட்களில்
பெய்திடும் மழை
உன் வருகையினை நினைவுபடுத்தும்

வறவிடப்படும் பேருந்துகள்
உன் காத்திருத்தலின் நிமிடங்களினை
இன்னும் அதிகரிக்கிறது

ப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.

பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.

திகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.

16 comments:

நசரேயன் on July 7, 2009 at 3:26 PM said...

//அதிகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.//

திரும்பி வந்தாலும் இதே சோகம் தொடருமுனு சொன்னா நம்பவா போறீங்க

ஆபிரகாம் on July 7, 2009 at 3:45 PM said...

நம்பிட்டேன் நசரேயஜி!

ப்ரியமுடன் வசந்த் on July 7, 2009 at 5:53 PM said...

//அதிகமாக அலுத்துக் கொள்கிறேன்
காத்திருக்க அவகாசமின்றி
நீ வந்து சேரும் நாட்களில்.//

நிதர்சனமான உண்மை

பாலா on July 7, 2009 at 5:58 PM said...

ennala anga poi ukkara mudiyala boss
(that means antha vemmmaiya unara mudiyala
oru velai love pannuthaan mudiumo????!!!!)

கவினா said...

இது உங்கள் அனுபவமா? அப்படி அனுபவமாக இருந்தாலும் சொல்லவா போறீங்க..

கவினா said...

வாழ்த்துக்கள், தொடர்ந்து எழுதுங்க. உண்மையானாலும் கற்பனை ஆனாலும்..

இது நம்ம ஆளு on July 8, 2009 at 7:40 AM said...

வருகைக்கு நன்றி

பிரிக்கபடும் ஏக்கத்துடுடனோ
சேரப்போகும் எதிர்பார்புடனோ
புறப்பட்டு செல்கின்றன தொடரூந்துகள்.

அருமை

பா.ராஜாராம் on July 8, 2009 at 12:44 PM said...

மிக நேர்த்தியான கவிதை,ஆபிரகாம்.
"இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்து விடுகிறது.."
கண்ணில் நீர் தளும்பியது...
வாழ்த்துக்கள்!

ஆபிரகாம் on July 8, 2009 at 2:54 PM said...

@பிரியமுடன்.........வசந்த் நன்றி வசந்த் ஜி
@பாலா நன்றி booss
@கவினா நன்றி கவினா(நல்ல பெயர்)
@இது நம்ம ஆளு நன்றி ஜி
@பா.ராஜாராம் நன்றி தல

சிநேகிதன் அக்பர் on July 8, 2009 at 3:48 PM said...

வ‌ரிக்கு வ‌ரி அருமை.

ஆபிரகாம் on July 8, 2009 at 4:06 PM said...

வாங்க அக்பர்

Prapa on July 9, 2009 at 7:31 AM said...

////இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது////

எங்களுக்கெல்லாம் கிடைக்குதில்லையே .....
அருமையாகவுள்ளது . தொடருங்கள்.
வருகைக்கு ரொம்ப நன்றி அடிக்கடி வாங்க...

ஆபிரகாம் on July 9, 2009 at 5:45 PM said...

@வாங்க பிரபா ஜி

kajan on July 10, 2009 at 7:02 PM said...

நீங்கள் எழுதியது என்றால் வாழ்த்துக்கள் காப்பி அடித்தது என்றால் பாராட்டுக்கள்

சப்ராஸ் அபூ பக்கர் on July 12, 2009 at 3:59 PM said...

///இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்துவிடுகிறது.///

தனிமையாய் ரசித்த வரி.....

அருமையாக இருந்தது.... வாழ்த்துக்கள்.....

நேசமித்ரன் on July 17, 2009 at 1:14 PM said...

"இப்போதெல்லாம்
வெறுமையான இருக்கைகளின் அருகிலேயே
அமர இடம் கிடைத்து விடுகிறது.."

அருமை தொடருங்கள்..!